search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆபரேஷன் கந்து வட்டி"

    • சென்னையில் அனைத்து சட்டம்-ஒழுங்கு உதவி கமிஷனர்களும் கந்துவட்டி தொடர்பான புகார்களை கண்காணித்து அதன் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • கந்து வட்டி புகார்கள் அளிக்கப்பட்டு அதில் உரிய நடவடிக்கை எடுக்காமல் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உதவி கமிஷனர்களே பொறுப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    கடலூர் மாவட்டம் மதுவானமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் 10-வது பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை செய்து வந்தார்.

    இவர் கடலூர் பெரிய நெல்லிக்கொல்லை பகுதியை சேர்ந்த அனிதா என்ற பெண்ணிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருந்தார். இந்த பணத்துக்கு கந்து வட்டி கேட்டு மிரட்டல் விடுத்ததால் காவலர் செல்வக்குமார் தற்கொலை செய்து கொண்டார்.

    இதைத்தொடர்ந்து கந்து வட்டி கேட்டு மிரட்டிய அனிதா கைது செய்யப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு, தமிழகம் முழுவதும் கந்து வட்டியை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் கமிஷனர்கள், ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள் உள்ளிட்டோருக்கு அவர் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார்.

    அதில் கந்து வட்டி கும்பலை ஒழித்துக்கட்ட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விரிவாக குறிப்பிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து கந்து வட்டி கும்பலை சேர்ந்தவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.

    டி.ஜி.பி.யின் உத்தரவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கந்து வட்டி வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் நிலுவையில் உள்ள கந்து வட்டி புகார்களை தூசு தட்டி எடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதுபோன்ற புகார்களில் உண்மை தன்மை இருக்கும் பட்சத்தில் கந்து வட்டிக் கேட்டு மிரட்டல் விடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    தங்களது பகுதியில் கந்து வட்டிக்கு விடும் நபர்கள் யார்-யார்? என்பதையும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். கந்துவட்டி பிரச்சினையால் யாரும் தற்கொலை செய்து கொண்டால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்குட்பட்ட போலீஸ் அதிகாரிகள் இன்ஸ்பெக்டர் மற்றும் டி.எஸ்.பி.க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னையிலும் கந்து வட்டி கும்பலை ஒழித்துக்கட்ட போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதன் பேரில் சென்னை மாநகர் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் கந்து வட்டி தொடர்பாக பழைய வழக்குகள் இருந்தால் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.

    சென்னையில் அனைத்து சட்டம்-ஒழுங்கு உதவி கமிஷனர்களும் கந்துவட்டி தொடர்பான புகார்களை கண்காணித்து அதன் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    கந்து வட்டி புகார்கள் அளிக்கப்பட்டு அதில் உரிய நடவடிக்கை எடுக்காமல் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உதவி கமிஷனர்களே பொறுப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சென்னையில் உள்ள அனைத்து சட்டம்-ஒழுங்கு உதவி கமிஷனர்கள் கந்து வட்டி விவகாரத்தில் தீவிரம் காட்ட தொடங்கி உள்ளனர்.

    • சேலம், நாமக்கல் மாவட்ட எஸ்.பி. அலுவலகங்கள் மற்றும் டி.எஸ்.பி. அலுவலகங்களில் கந்துவட்டி புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
    • கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார்கள் அளித்து வருகின்றனர். அதன்மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    சேலம்:

    கடலூர் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ்காரர் செல்வக்குமார் என்பவர் கந்துவட்டி கொடுமை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    அவரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக அனிதா என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதனையடுத்து கந்து வட்டியை ஒழிக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். நிலுவையில் உள்ள வழக்குகள், அனைத்து போலீஸ் நிலையங்களிலும் நிலுவையில் உள்ள கந்துவட்டி புகார்கள் மற்றும் வழக்குகள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும்.

    கந்துவட்டி கும்பலை சேர்ந்தவர்கள் பொது மக்களிடம் மிகுந்த வட்டி வசூலித்த தொகை எவ்வளவு? என்பது பற்றி முறையாக விசாரிக்க வேண்டும். இதுதொடர்பாக உரிய சட்ட ஆலோசனைகளை பெற்று வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

    நாமக்கல் மாவட்டத்தில் கந்துவட்டி சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் புகார் அளிக்கலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி கூறியிருந்தார்.

    இதேபோல் சேலம் மாவட்டத்தில் கந்துவட்டி, வங்கி காசோலை மற்றும் பத்திரம் வைத்து மிரட்டுபவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாகவோ அல்லது போலீஸ் துணை சூப்பிரண்டுகள் அல்லது போலீஸ் நிலையம் மூலமோ தெரிவித்தால் விசாரித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் தெரிவித்திருந்தார்.

    இதை தொடர்ந்து சேலம், நாமக்கல் மாவட்ட எஸ்.பி. அலுவலகங்கள் மற்றும் டி.எஸ்.பி. அலுவலகங்களில் கந்துவட்டி புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

    கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார்கள் அளித்து வருகின்றனர். அதன்மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் கந்துவட்டி நிதிநிறுவன உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. நாமக்கல்லை அடுத்த புதுச்சத்திரம் அருகே உள்ள திருமலைப்பட்டி பாலப்பட்டியை சேர்ந்தவர் ரங்கசாமி. விவசாயி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல்லை சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளரான சுந்தரராஜனிடம் ரூ.10 லட்சம் கடன்பெற்றார்.

    இதற்காக அவர் தனக்கு சொந்தமான வெவ்வேறு நிலங்களை பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அதற்கு தொடர்ந்து வட்டி செலுத்தி வந்து உள்ளார்.

    இதனிடையே நிதி நிறுவன உரிமையாளர் சுந்தர்ராஜன், விவசாயி ரங்கசாமியிடம் ரூ.40 லட்சம் கந்து வட்டி கேட்டு மிரட்டுவதோடு, குடும்பத்தினருடன் சேர்ந்து கூட்டு சதி செய்து ரங்கசாமியின் நிலத்தை அபகரித்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து விவசாயி ரங்கசாமி புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் சுந்தரராஜன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநிலம் முழுவதும் கந்து வட்டி கும்பலை சேர்ந்தவர்கள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.
    • கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    கடலூரை சேர்ந்த போலீஸ்காரர் செல்வகுமார் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார்.

    அனிதா என்ற பெண்ணிடம் வாங்கிய ரூ.3 லட்சம் கடனுக்காக அதிக அளவில் செல்வகுமார் வட்டி செலுத்திவிட்ட நிலையிலும் கந்துவட்டி பெண்ணான அனிதா தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாலேயே காவலர் செல்வகுமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து கந்துவட்டி வசூலித்த அனிதாவை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கந்துவட்டி கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அனைத்து போலீஸ் கமிஷனர்கள், சூப்பிரண்டுகள் மண்டல ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள் ஆகியோருக்கு அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அனைத்து போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோர் 2003-ம் ஆண்டு கந்துவட்டி தடை சட்டத்தை உடனடியாக முழுமையாக செயல்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    நிலுவையில் உள்ள வழக்குகள் மாநிலம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள கந்துவட்டி புகார்கள் மற்றும் வழக்குகள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும்.

    கந்துவட்டி கும்பலை சேர்ந்தவர்கள் பொது மக்களிடம் மிகுந்த வட்டி வசூலித்த தொகை எவ்வளவு என்பது பற்றி முறையாக விசாரிக்க வேண்டும். இதுதொடர்பாக உரிய சட்ட ஆலோசனைகளை பெற்று வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

    கந்துவட்டிக்கு விடுபவர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி அவர்கள் வைத்திருக்கும் கந்துவட்டி தொடர்பான ஆவணங்களை கைப்பற்ற வேண்டும். கையெழுத்து போடப்பட்ட வெற்று பேப்பர்கள், கையெழுத்திடப்பட்ட வெற்று காசோலைகள் மற்றும் அதுதொடர்பான ஆவணங்கள் இருந்தால் அவைகளை பறிமுதல் செய்ய வேண்டும்.

    கந்துவட்டி தொடர்பான இந்த நடவடிக்கைகளுக்கு 'ஆபரேஷன் கந்து வட்டி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை போலீசார் திறம்பட வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும்.

    கந்து வட்டி தொடர்பான நடவடிக்கைகளில் சிறப்பாக முன்மாதிரியாக பணியாற்றுபவர்களுக்கு அதற்குரிய அங்கீகாரம் தனித்தனியாக அளிக்கப்படும்.

    இவ்வாறு டி.ஜி.பி. சைலேந்திரபாபு தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் கந்து வட்டி கும்பலை சேர்ந்தவர்கள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர். கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×